states

img

ஜம்மு: மசூதி ஒலிப்பெருக்கிக்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமன் மந்திரம் ஓதிய மாணவர்கள்

ஜம்முவில் மசூதியில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் காந்தி நினைவு அரசு கல்லூரி மாணவர்கள் சிலர் மசூதி முன்பு ஹனுமன் மந்திரம் ஓதியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவர்கள் படிக்கும்போது உள்ளூர் மசூதியில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கியால் படிப்பதற்கு இடையூறு ஏற்படுவதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு முனிசிபல் கார்ப்பரேசன்(ஜேஎம்சி) செவ்வாயன்று (மே 16) மதவழிப்பாட்டு தலங்கள் மற்றும் பொது இடங்களில் அனுமதியின்றி இயங்கும் ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.

மேலும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், இந்துத்துவ அமைப்பினர் மசூதிகளில் ஒலிப்பெருக்கி இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனுமன் மந்திரத்தை ஓதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜம்முவிலும் மசூதியில் தொழுகைக்காக ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்படும் அறிவிப்பு இடையூறுகளை ஏற்படுத்துவதாக கூறி ஒலிப்பெருக்கிக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் அனுமன் மந்திரத்தை பாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.